அவிதவா நவமி
அவிதவா நவமி மகாளய பட்ச அவிதவா நவமி மகாளய பட்ச காலத்தில், நவமி திதியும் வரும். இந்த நவமி திதியை, அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் சுமங்கலி என்று அர்த்தம். அதாவது சுமங்கலிகளுக்கு உரிய நன்னாள். பெண்ணானவள், தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து, தர்ம காரியங்கள் பலவற்றையும் செய்கிறாள். சடங்கு, சாங்கியம், தர்மம் உட்பட எல்லாவற்றையும் கணவன் செய்யும் போது, மனைவியும் உடன் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். பெண்ணானவள், அதாவது மனைவியானவள், சுமங்கலியாக இறந்துவிட்டாலும் கூட, அவளின் கணவர் செய்யும் எல்லாக் காரியங்களிலும் அவளை இருத்தியே, முன்னிலைப்படுத்தியே எல்லாம் செய்வதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அப்போது ‘அவிதவா’ என்று சாஸ்திரம் அழைக்கிறது. அவிதவா நவமி யாருக்காக கடைபிடிக்கப்படுகிறது சுமங்கலியாக இறந்தவர்களுக்காக, அவிதவா நவமி என்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. மகாளய பட்சத்தின் நவமி திதியன்று வழக்கம் போல், பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும். தன் கணவருக்கு முன்னதாக இறந்துவிட்டவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அவர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும், கன்னிப்பெண்...