Posts

Showing posts from May, 2022

மண்பாண்ட மகிமை

Image
 மண்பாண்ட மகிமை…! https://www.youtube.com/watch?v=48NFOa9I838 https://www.youtube.com/watch?v=4A8HeqUSA7A https://www.youtube.com/watch?v=yP82AAwsGC0 https://www.youtube.com/watch?v=z9mNEPb5McI மண்பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை. மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும். பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. செம்புப் பா...

ஓய்வு

https://www.youtube.com/watch?v=1bLQ7BU9BkI https://www.youtube.com/watch?v=pTHDMc-ouH0&t=407s https://www.youtube.com/watch?v=GKe3P1p-Kjw https://www.youtube.com/watch?v=d-QOhcUSdlU ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும். ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்தி விடுவார்கள். நாம் செய்த வேலையை எப்படி மனதார விரும்பி வாழ்ந்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும் இல்லையா. பிடித்தது போல் நல்ல அழகாய் உடை அணியுங்கள். சில நண்பர்கள், ஓய்வு பெற்ற பிறகும் உடம்பில் சக்தி இருக்கும் வரை வேலைக்கு போகலாம் என்று கையில் அதிகம் காசிருந்தும், மீண்டும் வேலையை எங்கோ தேடிக்கொண்டு தொடர்வதை மட்டும் பார்க்க முடிகிறது. அது ஏன் என்று மட்டும் புரிவதே இல்லை. மீண்டும் இந்த பணத்தை சேர்க்க யாருக்காக துரத்துகிறீர்கள். மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டும...

சம்மணம்

கடைசியாக எப்போது கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்தீர்கள்? https://www.youtube.com/watch?v=UjQE0CVoOFo https://www.youtube.com/watch?v=QJ-iZD5Q56U https://www.youtube.com/watch?v=lu3CjL7dIY0 இதுவரையில்லையென்றால்  முதலில்தரையில்   15 நிமிடம் உட்காருங்கள்.  இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது.  லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி உட்கார முயலுங்கள், இப்படி உட்கார்வதால் முதுகை வளைக்கமுடியாதுமுதுகுநேராகத் தான்இருக்கும். இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுந்தால் முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும். நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான்.   நாற்காலி சோபாவில் அமர்வதன் தீமைகள். இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிர...

வெள்ளித்தாள் சுற்றப்பட்ட இனிப்பு

 ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுதுன்னு தெரியுமா? https://youtu.be/KfwsmyUJcxg https://www.youtube.com/watch?v=moAbVMNwIIg பொதுவாக ஸ்வீட் கடைகள்ல வாங்கற ஸ்வீட்டுகள் மேல ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்லேந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும்பாலானவங்க அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன பண்ணிடப்போகுதுங்கிற நம்பிக்கை தான்.இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்..இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப்பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது.. வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்.. ...

மன்னிப்பு

Image
 மன்னிப்பு மகத்துவமானது. https://www.youtube.com/watch?v=kz9XuuwcnwA https://www.youtube.com/watch?v=Zgxt9HSGft4 https://www.youtube.com/watch?v=KaRtcE-hBSs https://www.youtube.com/watch?v=grXr9ONpgw8 நமக்கு தீமை செய்தவர்களை பழி வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்களின் தவறுகளை மன்னிக்கும் குணம் படைத்தவர்களுக்கு, இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப் பார்க்காது என்று அண்மையில் வந்த ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது... மனிதர்களின் மனதிற்கும், உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்... இருநூறு பேர் பங்கேற்ற அந்த ஆய்வில் நூறு பேரிடம் உங்களுக்கு கெடுதல் செய்பவர்கள் மீது நீங்கள் எப்படி ஆத்திரமடைவீர்கள்...?, அவரை எப்படி பழி வாங்குவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது... மீதமுள்ள நூறு பேரிடம் நண்பர் தவறு செய்த பிறகும், அதை மன்னித்து மறந்து விடுவது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது... ஐந்து நிமிடம் கழித்து அதே நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்க்க வ...